இந்தியாவில் சரியும் கொரோனா – ஒரே நாளில் 18,795 பேருக்கு தொற்று! 179 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இதுவரை பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை 3ம் அலையின் அறிகுறி என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – அறநிலையத்துறை அறிவிப்பு!
கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக நாட்டில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,47,373 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை ஒழிக்கும் முயற்சியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,02,22,525 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 87,07,08,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை: இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
அதனை தொடர்ந்து தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,030 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை இதனால் 3,29,58,002 என்ற நிலையில் உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.81% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,92,206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.