சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை – Patym நிதி முடக்கம்!

0
சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை - Patym நிதி முடக்கம்!
சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை - Patym நிதி முடக்கம்!சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை - Patym நிதி முடக்கம்!
சீன கடன் செயலி விவராகத்தில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை – Patym நிதி முடக்கம்!

நாடு முழுவதும் போலி கடன் செயலியால் தற்கொலைகள் அதிகரித்து வந்த நிலையில் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு அதிரடி சோதனையை மேற்கொண்டது. இதன் முடிவில் சீன செயலிகள் இருப்பது கண்டறிப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடன் செயலி

இந்தியா முழுவதும் போலி கடன் செயலிகள் மூலமாக கடன் பெற்றவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஏனெனில் இந்த போலி கடன் செயலிகள் கடன் கொடுப்பது போன்று கொடுத்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாக கடன் தொகையும் மற்றும் வட்டியுடன் சேர்த்து அதிக பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் இந்த தொகையை கொடுக்காத நபர்களுக்கு அவர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மிரட்டுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் தற்கொலை செய்து வருவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன் முடிவில் இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகள் இதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்டதில் இதன் பின்னணியில் சீன நாட்டில் இருந்து இந்த செயலிகள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேலும் விசாரணை மேற்கொண்டதில் இந்த செயலில் இந்திய நபர்களின் பெயர்களை வைத்து பயன்படுத்தியதும் தெரியவந்தது.

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய அரசின் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதன் முடிவில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த வழக்கின் முதற்கட்ட நடவடிக்கையாக பெங்களூரில் பேடிஎம், ரேஸர்பே, கேஷ்ஃபிரீ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் தற்போது Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய முன்னணி பேமெண்ட் சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.46.67 கோடி மதிப்புள்ள நிதியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!