தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

காலாண்டுத் தேர்வு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முழுமையாக பள்ளிகள் செயல்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளாக காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2022-23 ஆம் கல்வியாண்டில் காலாண்டு தேர்வில் பெரிய மாற்றம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் படி வழக்கமாக அனைத்து பள்ளிகளிலும் பொதுவான தேதியில் காலாண்டு தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். ஆனால் தற்போது நடப்புக் கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த ஆண்டு அந்தந்த பள்ளிகள் விருப்பமான தேதிகளில் காலாண்டு தேர்வுகளை நடத்தலாம் எனவும் செப். 30 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு பணியில் ஆசிரியர்கள் – பாடம் நடத்துவதில் சிக்கல்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக். 1 முதல் அக்.9 ஆம் தேதி வரை விடுமுறை எனவும், 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.5 ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 10 ஆம் தேதியும், 6 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 6 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!