தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையற்றோர் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசின் இணையதளம் ஒன்று செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு இணையதளம்:
தமிழகத்தில் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவல் காரணமாக சில நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த நிறுவனங்களில் வேலை பார்த்த பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் வேலை தேடும் இளைஞர்கள், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களை இணைக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in செயல்படுகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!
தனியார் துறையில் வேலை செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுடைய விவரங்களான கல்வித்தகுதி, வயது, முன் அனுபவம் ஆகியவற்றை கொடுத்து, தங்களுக்கு விருப்பமான வேலையை தேர்வு செய்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உங்களது விவரங்களை பார்த்த தனியார் நிறுவனங்களும் உங்களை தொடர்பு கொண்டு வேலை வழங்க முன்வருவார்கள். இந்த இணையதளம் மூலமாக தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து அந்த இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்க இந்த இணையம் வழிவகை செய்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தம்? 70 வயதிற்கு பின்? உண்மை நிலவரம்!
எனவே இந்த இணையதளம் மூலமாக வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக சேவையை பெறும் வசதியை அரசு வழங்குகிறது. மேலும் முன்னதாக முகாம்கள் மூலமாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் தர்ப்பித்து தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் பணி நியமன வசதிகளை உருவாக்கி தரப்பட்டுள்ளது. எனவே இந்த வசதியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.