தமிழகத்தில் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 60 புதிய ஒப்பந்தங்கள்! முதல்வர் துவக்கி வைப்பு!
சென்னையில் இன்று துவங்கி இருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புதிய ஒப்பந்தங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தங்கள்
தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 4) துவக்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரூ.22,252 கோடியில் சுமார் 21 நிறுவனங்களின் புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்த புதிய ஒப்பந்தங்களால் ரூ.1,25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் இருக்கிறது. இது தவிர தமிழகத்தில் ரூ.1,497 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்றிருக்கும் 12 திட்டங்களும் முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் துபாய் நாட்டிற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பப்பு ஐலா என்ன அடிச்சிட்டா” செல்லமாக கொஞ்சும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் இதுவரை தொழில் முதலீடுகள் மூலம் ரூ.94,924 கோடிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 2 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று துவங்கப்பட்டிருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.