15,000 இந்தியர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டில் வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பன்னாட்டு IT சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான அட்டோஸ் அடுத்த ஒரு வருடத்தில் தனது இந்திய அலுவலகங்களில் சுமார் 15,000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் மென்பொருள் மற்றும் IT நிறுவனங்களில் புதிய வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிறிய நகரங்கள் துவங்கி பெரு நகரங்கள் வரையுள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது. இதனுடன், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பன்னாட்டு IT சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான அட்டோஸ், தனது இந்திய அலுவலகங்களில் புதிய பணியமர்த்தலை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதன் படி, அடுத்த 12 மாதங்களுக்குள் இந்நிறுவனம் சுமார் 15,000 பேரை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நியமனம் – முக்கிய உத்தரவு!
அட்டோஸ் நிறுவனத்தில் தற்போது வரை 40,000 இந்தியர்கள் பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அட்டோஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலி ஜிரார்ட் கூறுகையில், ‘அட்டோஸ் நிறுவனம் ஒரு முனைப்புள்ளியில் உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் விரைவான டிஜிட்டல் மயமாக்கலுக்கு நன்றி. இது பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தேவைகளை அதிகரித்துள்ளது. அதனால் வரும் நாட்களில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை – மாணவருக்கு கொரோனா தொற்று!
IT உலகின் மிக சிறந்த திறன்களை வழங்குவதில் இந்தியா முதன்மையான நாடாக இருந்தாலும், அதன் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டோஸ் நிறுவனம் சார்பில், இந்தியாவில் முதலீடு செய்யப்படும் 400 மில்லியன் யூரோக்களில் ஆண்டுதோறும் சுமார் 11 பில்லியன் யூரோக்கள் சம்பளம் மற்றும் திறமை உள்ளிட்ட செலவுகளில் செலுத்தப்படுகிறது. மேலும், இது தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பை கொடுத்து வருகிறது. குறிப்பாக அட்டோஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில், இந்தியா மட்டும் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.