தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நியமனம் – முக்கிய உத்தரவு!
பரமக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆசிரியர்கள் தொடர்பாக தொடர்ந்து பொதுநல வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு:
கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை – மாணவருக்கு கொரோனா தொற்று!
அதில், தமிழக பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. அதனடிப்படையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவ்வாறு நியமனம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஜம்மு அரசு உத்தரவு!
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டால் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க இயலாத நிலை உருவாகும். எனவே தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் பொருந்தும் என உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். வழக்கினை விசாரித்த நீதிபதி இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 10 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.