3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை – மாணவருக்கு கொரோனா தொற்று!
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் பயிலும் 11 ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கொரோனா :
தமிழகத்தில் கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே அதிகரிக்கும் தொற்றால் மூன்றாம் அலை வந்து விட்டது என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் உள்ள 5 மாணவிகளுக்கு அதே பகுதியில் உள்ள வேறு பெண்கள் பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கும் மொத்தம் 8 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஜம்மு அரசு உத்தரவு!
இதையடுத்து சுத்தம் செய்தல் பணிக்காக இரண்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் கள்ளப்புலியூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயிலும் 11 ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை – இணையத்தில் வெளியீடு!
மேலும் பள்ளிக்கு வந்த 20 க்கும் மேற்பட்ட, ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டிருக்கும் அச்சத்தால் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.