இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஜம்மு அரசு உத்தரவு!
ஜம்முவில் கொரோனா நேர்மறை விகிதம் மிகவும் குறைவாக மட்டுமே பதிவாகி வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக துணை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
தளர்வுகள்:
ஜம்மு – காஷ்மீரில் திங்கள் கிழமையான நேற்றைய நிலவரப்படி 127 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், காஷ்மீரில் 109 பேருக்கும், ஜம்மு பிரிவில் 19 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடைகால தலைநகர் ஸ்ரீநகரில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த யூனியன் பிரதேசத்திலும், 1,461 பேர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு விகிதம், 98.21% ஆக உயர்ந்து உள்ளது.
நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை – இணையத்தில் வெளியீடு!
கடந்த 10 நாட்களாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீநகர் துணை ஆணையர் அஜாஸ் அகமது மற்றும் எஸ்எஸ்பி, நேற்று நகரின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று கோவிட் -19 நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்தனர். முறையாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாத பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று துணை ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் விளக்கம்!
ஜம்முவில் நேர்மறை விகிதத்தை 0.2% க்கும் குறைவாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு 250 க்கும் குறைவாக உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் இரண்டு தளர்வுகள் அமலுக்கு வருவதாக துணை மாஜிஸ்திரேட் அன்ஷுல் கார்க் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடைகள் திறக்கவும், 25% முதல் 50% வரை வாடிக்கையாளர்கள் அனுமதிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக மக்கள் கடைபிடித்து ஒத்துழைப்பு தருமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.