அரியலூரில் நவ.28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!

0
அரியலூரில் நவ.28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
அரியலூரில் நவ.28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
அரியலூரில் நவ.28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான தகுதி வாய்ந்த ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து வருகின்றன. மேலும் அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இழந்துள்ளது. மேலும் பல்வேறு ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தும் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நவ.26 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகமானது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த Post Office சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!

இந்த முகாம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.28ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கரூர், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே தகுதியும், விருப்பமும் உள்ள வேலையில்லாத இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!