உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த Post Office சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!
ஆண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு கணக்குகளை துவங்கும் பெற்றோர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் மிக சிறந்த சேவைகளை அளிக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
போஸ்ட் ஆபீஸ் திட்டம்
பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்ன சேர்த்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் திட்டமிட துவங்கி விடுகின்றனர். ஏனென்றால் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் பணம் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதனால் குழந்தைகள் வளரும் முன்னமே அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு சேமித்து வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெற்றோர்களிடையே பரவலாக காணப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் முக ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இப்போது குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளை துவங்க திட்டமிட்டிருப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் சேவைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இந்த பதிவில் ஆண் குழந்தைகளுக்கான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் சிலவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக பப்ளிக் ப்ரொவிடன்ட் பண்ட் என்று சொல்லக்கூடிய PPF கணக்கு, 15 ஆண்டுகள் சேமிப்பு திட்டத்துடன் வருகிறது.
இந்த திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை பொருத்தளவு, 7.1 சதவீதம் வட்டியுடன் வருவாய்க்கு வரி விலக்கும் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகையும் கொடுக்கப்படுகிறது. அதனால் இந்த சேமிப்பில் பணம் செலுத்துபவர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்கால கல்வியை சிறப்பாக அமைக்க முடியும்.
அடுத்ததாக போஸ்ட் ஆபிஸின் ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ மூலமாக கணக்குதாரர்கள் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளலாம். இந்திய அஞ்சல் துறையின் இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டுக்கு 12 முறை என ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதியாண்டு கணக்கின் படி, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பு 8.1% வட்டியுடன் வருகிறது. தொடர்ந்து போஸ்ட் ஆபிஸின் அடுத்த திட்டம் ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ் சேமிப்பு திட்டங்களில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
சேலத்தில் நவ.26 தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை!
இந்த ஈக்விட்டி சேமிப்பு, நிதி முதலீட்டாளர்களை அனைத்து பங்குகளையும் வாங்க அனுமதிக்கின்றது. இந்த நிதி திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்தால், அந்த நிதியின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் விலை நிகர சொத்து மதிப்பு இல்லை. அதாவது இந்த நிதியின் NAV கணக்கீடு மூலம் நிகர சொத்து மதிப்பு பெறப்படும். அதனால் இந்த ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டம் நீண்ட காலத்திற்கு செய்யப்படும் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் இதில் சில அபாயம் இருப்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.