உலகம் முழுவதும் பரபரப்பு – மூளையில் சிப் பொறுத்த எலான் மஸ்க் தயார் – வெளியான முக்கிய தகவல்!
பிரபல ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளரான எலான் மஸ்க் மனிதனின் மூளைக்குள் சிப்பை பொருத்தும் சோதனையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த சோதனைகாக தன்னையே அர்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிப்:
டெஸ்லா நிறுவன தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்கினார். அதன்படி டிவிட்டரின் தலைவராக பொறுப்பேற்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வரிசையில் தற்போது மனிதர்களின் மூளையில் சிப்பை பொருத்தி அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
முதலில் இந்த சோதனை குரங்குகளிடம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மனிதர்களிடம் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார். இதன் முக்கிய அம்சம் என்னவெனில் இந்த சிப்பை கொண்டு மனிதர்கள் மனதில் நினைப்பதை கணினி வழியாக வெளிப்படுத்த முடியும். இந்த சோதனைக்காக சிப்பை தானே பொருத்திக் கொள்ளவுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளை அதிகம் பணியமர்த்தும் நிறுவனங்கள் – வெளியான சூப்பர் தகவல்!!
Exams Daily Mobile App Download
இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் இந்த நியூரோலிங்க் சோதனை தொடங்கும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து சோதனைக்கு தன்னை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.