தமிழகத்தில் தகுதியற்ற ஓய்வுதாரர்கள் நீக்கம்? அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் அரசு பணிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களை நீக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் கணவரை இழந்து ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகன்கள் இல்லாத முதியோர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அவ்வவ்போது இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அதனால் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் தகுதியற்ற நபர்களை களைய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
Post Office ல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை பெறலாம் – புதிய திட்டம் அறிமுகம்
Exams Daily Mobile App Download
அதாவது, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் நபர்களின் விவரங்களை அரசு பரிசீலனை செய்ய உள்ளது. அதன்படி இவர்களின் இறப்பு பட்டியல், பத்திரப்பதிவு, நகைக்கடன் சரிபார்ப்பு, அரசு அலுவலரை கொண்ட குடும்பங்கள் என பல்வேறு வகைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 40% மற்றும் அதற்கும் மேல் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு கடித வழியில் வலியுறுத்தியுள்ளது.