Post Office ல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை பெறலாம் – புதிய திட்டம் அறிமுகம்!
போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டமானது பாலிசி எடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஆயுள் காப்பீடு பாலிசியிலிருந்து எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. பயனர்கள் தினமும் ரூ.50 முதலீடு செய்வதன் மூலம் ரூ.35 லட்சம் வரை பெற முடியும்.
கிராம் சுரக்ஷா யோஜனா :
நாட்டின் வளர்ச்சி அடையாத பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நல்ல வருமானத்தை அளிக்கும் பல இடர் இல்லாத சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி உள்ளது. கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட பல திட்டங்களில் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் மிகவும் பிரபலமானது. இதில் பாலிசி எடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஆயுள் காப்பீடு பாலிசியிலிருந்து எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசிக்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. இதற்கு இணங்க, பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைந்த பிரீமியங்களைச் செலுத்தி அதிக நன்மைகளைப் பெறலாம்.
கிராம் சுரக்ஷா யோஜனாவின் முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் தகுதியைப் பார்ப்போம்:
- நுழைவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம் ஆகும்.
- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதி உள்ளது.
- பாலிசிதாரர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.
- 5 ஆண்டுகளுக்கு முன் பாலிசியை சரண்டர் செய்தால் அவர்களுக்கு போனஸ் பெறும் தகுதி கிடையாது.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே தகவல்!
- பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 ஆக தேர்வு செய்யலாம்.
- பாலிசி சரண்டர் செய்யப்பட்டால் குறைக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்
மேலும், கிராம் சுரக்ஷா யோஜனா பாலிசியின் படி ஒரு நபர் திட்டத்தின் கீழ் பாலிசி மதிப்பு ரூ.10 லட்சமாக இருந்தால், ஒரு நாளைக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,515 முதலீடு செய்தால், பாலிசிதாரரின் வயது காலத்துக்கு பிறகு சுமார் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும். அதாவது இந்த பாலிசியில் முதலீடு செய்பவர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000 லட்ச தொகையும், 58 ஆண்டுகளுக்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சத்தொகை வரை மெச்சூரிட்டி பெனிஃபிட்டை பெறுவார்கள்.