தமிழகத்தில் பள்ளி பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் அவசியம் – இல்லையென்றால் அபராதம்!
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் தகுதி சான்றிதழை பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெறவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்:
தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு முறையான தகுதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது மாவட்டம் வாரியாக பள்ளி பேருந்துகளில் 3 கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் விதிகளுக்குட்படாத பேருந்துகள், குறைபாடுகள் உடைய பேருந்துகள் கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 4 & 5ம் தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்து கழகம் ஏற்பாடு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூரில் இன்று முதல் பள்ளி பேருந்துகளின் இறுதி கட்ட ஆய்வு பணிகள் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கியது. ஜூன் 5 வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆய்வுக்கு வராத பேருந்துகளை பள்ளிகள் திறப்பின் போது கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் தகுதி சான்றிதழை பெறாமல் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.