தமிழகத்தில் ஜூன் 4 & 5ம் தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்து கழகம் ஏற்பாடு!
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், இதற்காக போக்குவரத்து கழகம் பல ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய வார இறுதி நாட்களான ஜூன் 4ம் தேதி அதிக அளவிலானவர்கள் சொந்த ஊர்களில் இருந்து இருப்பிடங்களுக்கு திரும்புவார்கள்.
ஹிஜாப் பிரச்சனை வந்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?
இதனால் பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து, மற்ற தமிழக மாவட்டங்களுக்கும், மற்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மொத்தம் 250 பேருந்துகளும், திருச்சியில் இருந்து மற்ற ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளும் என்று மொத்தம் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.