ஹிஜாப் பிரச்சனை வந்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

0
ஹிஜாப் பிரச்சனை வந்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?
ஹிஜாப் பிரச்சனை வந்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?
ஹிஜாப் பிரச்சனை வந்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

மத்திய பிரதேச மாநில பள்ளிகளில் அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. அப்போது அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத பள்ளியின் பதிவை அக்குழு ரத்து செய்துள்ளது.

பள்ளியில் ஆய்வு:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் மாணவிகள் ஹிஜாப் அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரித்த போது அப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து ஹிஜாப் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு – மின்வாரியம் அதிரடி!

அதனை தொடர்ந்து தற்போது இப்பள்ளியின் பதிவை அரசு ரத்து செய்துள்ளது. இப்பள்ளியை ஆய்வு செய்ய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. ஆய்வின் போது பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளுக்கு இணங்க பள்ளியின் நடைமுறைகள் இல்லாதால் அப்பள்ளியின் பதிவை அரசு ரத்து செய்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!