தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு – யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்! மின்வாரியம் விளக்கம்!
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறித்தான அறிவிப்பையும் மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்கட்டணம்
ஒன்றிய அரசாங்கம் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தலாம் என முடிவு செய்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே தமிழகத்தில் மின்சார துறையில் ரூ.12,647 கோடி கடன் வந்துள்ளது. இந்த கடனை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்துவது தான் ஒரே தீர்வு என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இந்த மின்கட்டண உயர்வால் பாதிப்படையாத வண்ணம் மின்கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது எவ்வளவு மின்கட்டணம் உயரவுள்ளது என்பதை பார்க்கலாம்.
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எப்போது? – 7வது ஊதியக் குழுவின் அறிக்கை!
அதாவது, தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு ஒரு மாதத்திற்க்கு ரூ.27 முதல் ரூ.565 வரை மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசைக்கு மின்கட்டணம் கிடையாது. அதாவது, 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 மாதங்களுக்கு 101-200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 27.50 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், 300 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.72.50 கூடுதலாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 400 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.147.50 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும், 500 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.297.50 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும், 600 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.ரூ.155 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும், 700 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.275 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும், 800 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.395 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும், 900 யூனிட் பயன்படுத்துபவர்கள் மாதத்திற்கு ரூ.565 கூடுதலாக செலுத்த வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.