தமிழகத்தில் மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் – மின்வாரியம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் இணைப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் விநியோக விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்ஆப்பிலும் Status Archive அம்சம் – வெளியான புதிய அப்டேட்!
மேலும், தமிழகத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரைக்கும் இலவசமாகவும், 500 யூனிட் வரைக்கும் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின் இணைப்பை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சில மின் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு மின் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.