நஷ்டத்தை சரிக்கட்ட ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள முயற்சி – வரவுள்ள புதிய திட்டங்கள்!
உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஐடி நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகிறது. இதிலிருந்து மீள பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஐடி நிறுவனங்கள் தங்களின் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள்:
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் வளரும் நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை அனைத்தும் தொழில் சரிவை கண்டது. அதனால் முக்கிய துறைகள் வருவாய் இழப்புக்கு ஆளானது. இதற்கு மத்தியில் ஐடி துறை மட்டும் கொரோனா பேரிடர் காலத்திலும் வளர்ச்சியை எட்டியது. இந்த நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தியது. மேலும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அளித்து வந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தற்போது நிலவி வரும் சர்வதேச பொருளாதார மந்த நிலை ஐடி நிறுவனங்களை பாதிக்க தொடங்கியுள்ளது. டிசிஎஸ் கடந்த ஆண்டை காட்டிலும் 15.45% வளர்ச்சியினை எட்டியது. மேலும் இந்நிறுவனத்தின் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வருவாய் விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இத்தகைய நாடுகள் பணவீக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் நிறுவன வருவாயில் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதே போல இன்ஃபோசிஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் 103 புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 117 வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஐடி துறையில் தற்போது நிலவி வரும் இது போன்ற பின்னோக்கு நிலையை சரி செய்ய தங்களது சேவையினை பல்வேறு நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர். இது அவர்களின் மார்ஜினை தக்க வைக்க உதவும் என்றும் நம்புகின்றனர்.