தமிழகத்தில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச தொழில் பயிற்சி – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு சார்பில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலவச பயிற்சி
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களையும், ஊக்கத்தொகையும் கொண்டு சேர்க்கும் வகையில் பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில் தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
Follow our Instagram for more Latest Updates
அதில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் குடும்பங்களின் நிலையை உயர்த்த 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்திட பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET), தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம் (N I F T), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (C L R I), மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (C F T R I), நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (N T T F), இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் பேக்கேஜிங் ( I I P ), ஆகிய நிறுவனங்களில் ரூ.2.50 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைநகரை அமைக்க உள்ள அரசின் நூதன திட்டம் – நிறுவனங்களுக்கு லைப் டைம் ஜாக்பாட்!
Exams Daily Mobile App Download
மேலும் 2000 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET). தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம் (N I F T), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (C L R I), மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (C F T R I), நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (N T T F), இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் பேக்கேஜிங் (I I P), ஆகிய நிறுவனங்கள் மூலமாக ரூ.2,50,00,000/- ரூபாய் செலவில், பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் அமைக்க தேவையான பயிற்சி வழங்க இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளார்.