ரூ.3,40,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே..!
எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Chief Executive Officer (CEO) பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகிய அறிவிப்பின்படி, Chief Executive Officer (CEO) பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் Energy Efficiency ல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- 30.04.2022ம் தேதியின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 55 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Senior Management Level ஊழியராக Energy Sector துறைகளில் பெரிய நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசு நிறுவனங்களில் 10 வருடங்களில் குறைந்தது 3 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை பணிக்கான சம்பளமாக பெற உள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் கூடுதல் தொகை மற்றும் அளிக்கப்படும் சலுகைகள் பற்றியும் அறிவிப்பில் காணலாம்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- தேர்வுக் குழு பரிந்துரைப்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
EESL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக (நாளை) 30.04.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.