பள்ளி, கல்லூரிகள் ஜூன் 15 வரை மூடல் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

0
பள்ளி, கல்லூரிகள் ஜூன் 15 வரை மூடல் - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
பள்ளி, கல்லூரிகள் ஜூன் 15 வரை மூடல் - தலைமை செயலாளர் அறிவிப்பு!!
பள்ளி, கல்லூரிகள் ஜூன் 15 வரை மூடல் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்று குறைவு காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கல்வி நிறுவனங்கள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மூடல்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில மற்றும் யூனியன் அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 4, 5இல் முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

ஜம்மு காஷ்மீரில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அங்கு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், ஜூன் 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை நிறுவனத்திற்கு நேரில் வர வலியுறுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டும் ஆராய்ச்சி, ஆய்வக மற்றும் ஆய்வறிக்கை பணிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊழியர்கள் நேரில் வர பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலுவலக பணிகளுக்காக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு தேவையான கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் நேரில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!