1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் மறுதிறப்பு முன்னேற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முதலாம் அலை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அனைத்து மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க மே 31 கடைசி நாள்!
மேலும் கொரோனா குறைந்த நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் தொடங்கப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை நடத்தி வந்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் தேர்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டன. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மறுதிறப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.