சமையல் எண்ணெய் விலை குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசு தீவிரம்! இல்லத்தரசிகள் நிம்மதி!
இந்தியாவில் வணிகர்கள் சமையல் எண்ணெயை கையிருப்பு வைக்க உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி அனைத்து மத்திய உணவு அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சமையல் எண்ணெய்:
இந்தியாவில் சமையல் எண்ணெய் நம் அத்தியாவசிய நுகர்வு பொருட்களில் ஒன்றாக உள்ளது. தினசரி சமையலில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது .சாதாரணமாக ஒரு குடும்பம் மாதம் 2 லிட்டர் வரை சமையல் எண்ணெய்யை பயன்படுத்துகிறார்கள். நம் மாதாந்திர மளிகை பட்ஜெட்டில் சமையல் எண்ணெய்க்கான செலவு மட்டும் அதிகம் உள்ளது. கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை சுமார் 46% உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை குறித்து கடந்த மே மாதம் உணவுத்துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு, கூடுதல் போனஸ் தொகை? கணக்கீடு விளக்கம்!
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி பண்டகச் சந்தைகளில் கடுகு எண்ணெய் வணிகத்தை மேற்கொள்வதும் நிறுத்தி வைக்கப்பட்டது . இந்த நிலையில் வணிகர்கள் சமையல் எண்ணெயை கையிருப்பு வைக்க உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று – 193 பேர் பலி!
இது குறித்து மத்திய உணவு அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் அந்தந்த மாநில நிலவரங்களுக்கேற்ப சமையல் எண்ணெய் கையிருப்பு உச்ச வரம்பை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு வரும் மார்ச் மாதம் வரை தொடர வேண்டும். சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.