தமிழகம் வர இ-பதிவு கட்டாயம், தீவிர கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இ-பாஸ் கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான் ‘ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. தற்போது ஓமைக்ரான் வைரஸ் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன.
நெல்லை தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு – 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
அதில் குறிப்பாக வெளிநாட்டினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் மற்றும் கட்டாயமான முறையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
அதனால் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் வரும் பயணிகள் தமிழகத்திற்குள் நுழைய இ-பதிவு கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் கட்டாயமான முறையில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அத்துடன் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.