Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!

0
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் - தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் - தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!

அஞ்சலகத்தின் கிராம சுமங்கல் யோஜனா காப்பீடு திட்டம் திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம். இதில் தினமும் 95 ரூபாய் சேமிப்பதன் மூலம் 14 லட்சம் வரை திரும்ப பெறலாம்.

கிராம சுமங்கல் யோஜனா:

இந்தியாவில் அஞ்சலங்கள் வங்கிகளுக்கு இணையாக நல்ல சேமிப்பை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. மேலும் இந்த திட்டங்களில் அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி அஞ்சல் நிலைய கணக்குகளில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு வரை இந்த புதிய மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் கை கொடுக்கிறது, வருங்கால வைப்பு நிதி, செல்வ மகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டங்கள் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று, மீண்டும் ஊரடங்கு? பொதுமக்கள் அச்சம்!

இவைகளை தொடர்ந்து தற்போது கிராம சுமங்கல் யோஜனா என்ற காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் 95 ரூபாய் சேமிப்பதன் மூலம் முதிர்வுத்தொகையாக 14 லட்சம் வரை திரும்ப பெறலாம். இந்த திட்டத்தில் 2 வகையான கால அளவு உள்ளது. ஒன்று 15 வருடங்கள், மற்றொன்று 20 வருட திட்டம். மேற்சொன்ன விரும்புவோரது வயது 19 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 40 ஆகும். 15 ஆண்டு கால திட்டத்தில் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20% பணம் திரும்பக் கிடைக்கும். மீதமுள்ள 40% தொகை திட்டத்தில் முதிர்வு காலத்தில் கிடைக்கும்.

தமிழகத்தில் 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – டிச.18 வேலைவாய்ப்பு முகாம்!

அடுத்ததாக 20 ஆண்டு கால திட்டத்தில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 40% பணம் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் வழங்கப்படும். மேலும் இதில் காலாண்டு பிரீமியம் தொகையாக ரூபாய் 8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியமாக ரூ.16,715, ஆண்டு பிரீமியம் ரூ .32,735 செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் முடிவில் மொத்தம் ரூ .13.72 லட்சம் தொகை உங்களுக்கு கிடைக்கும். இதில் 4.2 லட்சம் முன்கூட்டியே வழங்கப்படும். இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்தால் அவரின் நாமினிக்கு மீதி காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!