நெல்லை தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு – 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் பலி
தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் துவங்கி பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த 3 மாணவர்கள் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் பலியாகிய கோர சம்பவம் நடந்திருக்கிறது.
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.95 சேமிப்பு! 14 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்!
அதாவது நெல்லை டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், இதில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இவர்களில் மூன்று மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரும் உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளியில் காலை 11 மணியளவில் விடப்பட்ட இடைவேளை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது இந்த விபத்து சம்பவத்தில் பாதிப்படைந்த மாணவர்களின் விவரம் கண்டறியப்பட்டு வரும் நிலையில், வகுப்பறையில் இல்லாத மாணவர்களை கண்டறியும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று, மீண்டும் ஊரடங்கு? பொதுமக்கள் அச்சம்!
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் 8 மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.