தமிழக சமூக நல அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவருக்கு வேலை – பெண்களுக்கு முன்னுரிமை..!
தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் Case Person, Multi Purpose Assistant, Security ஆகிய பணிகளுக்கு என்று தகுதியான நபர்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம். இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Social Welfare Office, Tenkasi (DSWO) |
பணியின் பெயர் | Case Person, Multipurpose Assistant, Security |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DSWO காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பில், Case Person, Multi Purpose Assistant, Security ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
DSWO தகுதி விவரங்கள்:
- வழக்கு பணியாளர் 1 & 2 (Case Person) பணிக்கு என மொத்தமாக 05 பணியிடங்கள் உள்ளது. இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சமூகப்பணி அல்லது உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Assistant) பணிக்கு என மொத்தமாக 01 பணியிடங்கள் உள்ளது. இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பாதுகாவலர் (Security) பணிக்கு என மொத்தமாக 01 பணியிடங்கள் உள்ளது. இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமாகும்.
DSWO முன் அனுபவம்:
- வழக்கு பணியாளர் (Case Person) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் குறைந்தது 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Assistant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் சமையல் வேலைகளில் குறைந்தது 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- பாதுகாவலர் (Security) பணிக்கு பணிக்கு விண்ணப்பதாரர்கள் தன்னார்வ தொண்டு நிறுவங்களில் குறைந்தது 04 வருடம் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
DSWO ஊதிய தொகை:
- வழக்கு பணியாளர் (Case Person) – ரூ.15,000/-
- பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Assistant) – ரூ.6,400/-
- பாதுகாவலர் (Security) – ரூ.10,000/- என தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.
DSWO தேர்வு முறை:
மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
DSWO விண்ணப்பிக்கும் முறை:
தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பணிக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்கும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து உடனே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.