பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதையை முடிக்கும் எழில் – அமிர்தாவுடன் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதையை முடிக்கும் எழில் - அமிர்தாவுடன் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதையை முடிக்கும் எழில் - அமிர்தாவுடன் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதையை முடிக்கும் எழில் – அமிர்தாவுடன் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்யும் லீலைகளால் தொடர் விறுவிறுப்பாகவும், எதிர்பார்புகளோடும் நகர்கிறது. கோபி பாக்கியாவிடம் சிக்குவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது புதுவிதமாக கோபி கதையை எழில் முடிக்கவிருக்கிறார் என்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் பாக்கியலட்சுமி. ஆனால் கடந்த சில நாட்களாகவே கோபியை தான் மையமாக கொண்டு சீரியல் நகர்ந்தது. ஏனென்றால் கள்ளகாதலுக்காக அவர் எடுக்கும் முயற்சிகள், செய்யக்கூடும் லூட்டிகள் என அனைத்து காட்சிகளும் ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும், மறுபக்கம் கோவத்தையும் ஒவ்வொரு வீட்டின் இல்லத்தரசிகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் ட்ரெண்ட் என்றாலே அது கோபி தான். அந்த அளவுக்கு கோபியின் நடிப்பும், அவரது ரோலும் சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் பரவி லைக்குகளை குவித்து வருகிறது.

கோபியால் மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா, சோகத்தில் குடும்பம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் திடீர் திருப்பம்!

இதற்கிடையில் வீட்டில் உள்ளவர்களில் ராதிகா,கோபியின் கள்ளக்காதலை அறிந்தவர் என்றால் அது தாத்தா மட்டும் தான். அவரும் இந்த தகவலை அறிந்து சொல்ல வந்த நிலையில் கை, கால் செயல் இழந்தவராக படுத்த படுக்கையானார். அதன் பிறகு இன்று வரை பாக்கியவிடம் சிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த பொழுதிலும் சிக்காத அவர் திடீர் திருப்பமாக தனது மகன் எழிலிடம் சிக்கினார். உண்மைகளை அறிந்த எழிலுக்கு அப்பாவுடன் இருந்த பெண் ராதிகா என்பது தெரியாது. இதை குறித்து தாத்தாவிடம் சொல்ல உடனே ராமமூர்த்தியும் உண்மையை வெளிக் கொண்டு வரும் விதமாக ராதிகாவை காண செல்கிறார்.

அப்போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுகிறார், ராதிகாவும் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீடு செல்கிறார். இவ்வாறு கதையில் அடுத்து கோபி சிக்குவாரா இல்லையா என யோசிக்க, இந்த பக்கம் எழில் மற்றும் அமிர்தா சம்பந்தமான வேறொரு விஷயம் நடந்துள்ளது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அமிர்தாவுக்கு பொது இடத்தில் ஒருவர் பிரச்சனை கொடுக்க அந்த விஷயம் எழிலுக்கு தெரியவந்தது. உடனே எழில் அவர்களுடன் சண்டை போடுகிறார். அதில் ஒருவன் நீ யாரு இவளுக்கு என்று கேள்வி கேக்க! எழில் தான் அமிர்தாவின் புருஷன், அவர் தனது மனைவி என திடீரென கூறி அதிர்ச்சியாக்குகிறார். அதைக் கேட்டு அமிர்தா ஷாக் ஆனதை விட ரசிகர்கள் தான் அதிகம் ஷாக் ஆகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!