ஓட்டுநர் & வாகன உரிமம் புதுப்பிக்கும் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
மார்ச் 31ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முடக்கத்தில் தான் உள்ளது. இதனால் அரசு அலுவலகம் தொடர்பான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஒரு சில வேலைகள் மட்டும் ஆன்லைன் முறையில் நடந்தாலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தேதியை டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
நீட்டிப்பு காலம்:
நோய்த்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படாத நிலையில் மார்ச் 31ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு ஆதார் இணைப்பில் தளர்வு – ஜனவரி 31 வரை கால அவகாசம்!!
அறிவிப்பின் படி, கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, மோட்டார் வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2020 பிப்ரவரி 1ம் தேதி முதல் 2021 மார்ச் 31ம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து வாகன ஆவணங்களுக்கும் இந்த அறிவிப்பே பொருந்தும். இந்த தேதிகளில் காலாவதியான ஆவணங்களை செல்லத்தக்க ஆவணங்களாக கருத வேண்டும் .
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போதில் இருந்து கிடைக்கும்?? அறநிலையத்துறை அதிகாரி தகவல்!!
இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமே குடிமக்கள், வாகன ஓட்டிகளும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் இந்த அறிவிப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்