TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!

0
TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!
TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!
TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து வகையான போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனால் அரசு துறைகளில் தேவையான அளவு பணியாட்கள் இல்லாத நிலை உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் மருத்துவர்களின் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் இதில் 1008 மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 1000 மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வருகிற ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கூறினார்.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மருத்துவ துறையில் மருத்துவர், 18 வகையான சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் சுமார் 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் இந்த காலிப்பணியிடங்கள் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளது. மேலும் தேர்வு வாரியத்திற்கு இது தொடர்பாக இணையதளத்தில் அறிவிப்புகள் வெளியிடுவது, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 4 மாத கால அவகாசம் வேண்டும். அதனால் இந்த காலிப்பணியிடங்கள் வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!