இந்திய ராணுவத்தில் நீங்களும் ஒரு அங்கமாக வேண்டுமா? இத மிஸ் பண்ணாம படியுங்க!
திருப்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் வருகிற மாதங்களில் நடக்க உள்ள நிலையில், இதற்கு ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனவும், அதற்கான சில விதிமுறைகளை குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய ராணுவம்
இந்திய ராணுவத்திற்கு நாடு முழுவதும் அவ்வப்போது ஆள் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சில குறிப்பிட்ட மாவட்டங்களில் முகாம் ஒன்றை அமைத்து அதன் மூலம் தேர்வு செய்வது என்பது வழக்கம். அவ்விதமாக தற்போது செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற இருக்கும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அவர் கூறியதாவது: வருகிற செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் இருக்கும் டி.இ.ஏ பொது மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜா் ஜெனரல் டியூட்டிட், சோல்ஜா் டெக்னிக்கல், சோல்ஜா் கிளா்க், ஸ்டோா் கீப்பா் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு நடக்க இருக்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுத நினைப்பவர்கள் கட்டாயமாக 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சோல்ஜா் டிரேட்ஸ்மேன் பணிக்கு மட்டும் 8ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
நாளை (ஆகஸ்ட் 1) முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு
எனவே, ராணுவத்தில் இணைய தயாராக உள்ளவர்கள் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு தகுதியானவர்கள் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அதிகார பூர்வ www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், இந்த முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்களது வயது 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குப் பின் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.