ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க கூடாது – உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு!

0
ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க கூடாது - உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு!
ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க கூடாது - உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு!
ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க கூடாது – உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு!

மத்திய அரசு ஆதார் எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கையை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இப்போது இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் ஆதார் எண்ணை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் கூட ஆதார் கார்டு மூலமாக தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் கணக்குகளில் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். ஆதாரில் ஏதேனும் விவரங்கள் சரியானதாக இல்லை என்றால் திருத்தங்களை மேற்கொள்ள UIDAI ஆணையம் அனுமதி வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது ஆதார் கார்டை வைத்து பல மோசடிகள் ஏற்படுவதால் அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆதாரில் உள்ள தரவுகளை வைத்து முறைகேடுகளை நிகழ்த்தலாம் என்பதால் தனியார் நிறுவனங்களில் ஆதாரின் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் ஆதார் நகலை சமர்ப்பிக்கவோ அல்லது எடுக்கவோ கூடாது. இது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.

ரூ.1,80,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

அத்துடன் நீங்கள் ஆதார் சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஆதார் அட்டையின் கடைசி 4 எண்களை மட்டும் காண்பிக்கும்

ஆதார் அட்டையை https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்தால் போதுமானது என்று சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.  இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சுற்றறிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி தற்போது ஆதார் அட்டையை வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்றும் ஆனாலும் ஆதார் எண்ணை பயன்படுத்தும் போதும் பிறரிடம் பகிரும் போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!