விடிய விடிய கடைகளை திறக்க அனுமதி, தீபாவளிக்கு கூடுதல் தளர்வுகள் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வர்த்தகம் சார்ந்த கடைகளுக்கு விடிய விடிய அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றன. அதனை தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் அதாவது நவ.4ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இம்மாதம் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தை பின்பற்றி நடக்கும் புதுச்சேரியில் தீபாவளி மற்றும் மழையின் காரணமாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் நவ.8ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இரவு நேர ஊரடங்காக இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.5 முதல் தடுப்பூசி – சுகாதாரத்துறை உத்தரவு!
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் மட்டும் விடிய விடிய வியாபாரம் செய்யும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த வகையில் சாராத நிறுவனங்கள் இரவு நேர ஊரடங்கில் செயல்பட அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் வளாகங்கள் 100% பார்வையாளர்களுடன் இரவு 12.30 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் திரையரங்குகளில் தினசரி நான்கு காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.