தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.5 முதல் தடுப்பூசி – சுகாதாரத்துறை உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரணஜன்னி தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த 19 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதனால் கடந்த செப்.1ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்து நடக்க அறிவுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் டிச.1 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இதுவரை கொரோனா தொற்று குறைந்துள்ளதற்கான காரணங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியது தான். இந்த கொரோனா தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சிறார்களுக்கு ஒரு சில நாடுகளில் பைசர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் கூடிய விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதனால் 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டி.பி.டி எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அனைத்து பள்ளி வளாகங்களிலேயே செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்றும், பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.