தீபாவளி போனஸ் உயர்வு? தொழிலாளர் சங்கம் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அனைத்து துறைகளையும் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் தீபாவளி போனஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அந்த வகையில், திருப்பூர் பனியன் கம்பெனி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
தீபாவளி போனஸ்:
நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நடப்பு ஆண்டில் அக்டோபர் 24ம் தேதி அன்று வருகிறது. ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலார்களுக்கு அவர்களின் உழைப்பை மரியாதை செய்யும் விதமாக நிறுவனங்கள் தீபவாளி பண்டிகையை ஒட்டி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான தீபவாளி போனஸை அனைத்து நிலை ஊழியர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
அந்த வகையில், திருப்பூா் சி.ஐ.டி.யு அலுவலகத்தில் பனியன் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் சங்க தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. களைகட்டும் நகை விற்பனை!
Exams Daily Mobile App Download
அதன்படி, தீபாவளிக்கு திருப்பூர் பனியன் தொழிலாளர் சங்க ஊழியர்கள் அனைவர்க்கும் விலைவாசிக்கு தகுந்த படி தீபாவளி போனஸை அளிக்க வேண்டும் என்றும், குறிப்பாக போனஸை 15 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இல்லையேல், வரும் அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த கோரி திருப்பூர் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்