தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி கருணைத்தொகை – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளியையொட்டி, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
போனஸ் மற்றும் கருணைத்தொகை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழக அரசு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. நோய் தடுப்பு பணிகளுக்கு, மருத்துவ கட்டமைப்புகளும் பெருவாரியான தொகை செலவிடப்பட்டது. இந்த நிலையிலும் அரசு, அரசு துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் தவறாது சம்பளம் வழங்கியது. மேலும் 2022 ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி – பயணிகள் கவனத்திற்கு!
மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2020- 2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். லாபம் ஈட்டியுள்ள மற்றும் நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% வரை வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவித்துள்ளது.
மொபைல் நம்பர் இன்றி Aadhaar கார்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அரசு துறையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகையாக ரூபாய் 8,400 வழங்கப்படும். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணை தொகையாக வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.