குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றால அருவி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என்று அடுத்தடுத்து மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு உள்ளது. மிக அதிக அளவிளான பாதிப்புகள் ஏற்பட்டதால் அரசு மிக தீவிர நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும், மீண்டும் அதிக அளவில் தொற்று பரவி விடக் கூடாது என்ற நோக்கில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
அக்.15 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!
கடந்த மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கிய சுற்றுலா தளங்களான கோடைக்கான, ஊட்டி, நீலகிரி போன்ற சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அனுமதி அளிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது. இருப்பினும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் குற்றாலம் போன்ற ஒரு சில சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகையை அரசு தடை செய்திருந்தது. சமீபத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI ATM கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இதோ!
அடுத்து வர இருக்கும் பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை இருப்பதால் தமிழக சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அரசு மக்களை அதிக கூட்டமான இடங்களை தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றால அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகாவும் தெரிவித்துள்ளார்.