மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணை செலுத்துதல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை உடனடியாக திரும்ப செலுத்தும் படி தொந்தரவு செய்யக் கூடாது என நிதி நிறுவனங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது. இந்த ஊரட்ங்கால் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. மக்கள் வேலையிழந்து சிரமப்படுகின்றனர். ஏழை எளியோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான காலத்தில் குடும்ப செலவுகளுக்கே பணம் இன்றி வறுமையில் வாடுகின்றனர்.
ஜூன் 21க்கு பின்னர் கடுமையான முழு ஊரடங்கு – இங்கிலாந்து அரசு!
இந்த பெருந்தொற்று காலத்தில் கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் இந்த சமயத்தில் கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்துவது முடியாத காரியம் ஆகும். தனியார் வங்கிகள், கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த கோரி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுய உதவிக் குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது, ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் கடனை திரும்பக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.
இதேபோல் எல்லா மாவட்டங்களிலும் நடைமுறை செயல்படுமா .