ஜூன் 21க்கு பின்னர் கடுமையான முழு ஊரடங்கு – இங்கிலாந்து அரசு!
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கொரோனாவை காட்டிலும் 60 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ்:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலில் இருந்து நாடுகள் சிறிது சிறிதாக தற்போது மீண்டு வரும் நேரத்தில் கொரோனாவின் டெல்டா மாறுபாடு வைரஸ் தற்போது பரவி வருகிறது. முதல் அலை கொரோனவை விட, இரண்டாம் அலை கொரோனாவால் பலர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமாக அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட ‘டெல்டா’ வேரியன்ட் கொரோனா தாக்கம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் – எளிய வழிமுறைகள் இதோ!!
மேலும் டெல்டா வேரியன்ட் ஆறே மாதங்களில் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊரடங்கை அமல்படுத்த காரணமாக இருந்த கொரோனா வைரஸை விட இந்த வைரஸ் 60 சதவிகிதம் வேகமாக உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கென்ட் பகுதியில்தான் முதலில் ஆல்பா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 21 முதல் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், நேற்று ஒரே நாளில் 7,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் டெல்டா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஏற்கனவே ஜூன் 21 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மேலும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே ஜூன் 21 முதல் தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக இருந்த நிலையில் தற்போது கடும் கட்டுப்பாடுகளை விதிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருகிறது.
எப்பாடு பட்டாவது இந்த வைரஸ்களை சீனாவுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்