தமிழகத்தில் விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி – இயக்குனர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி - இயக்குனர் அறிவிப்பு!
தமிழகத்தில் விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி - இயக்குனர் அறிவிப்பு!
தமிழகத்தில் விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய வசதி – இயக்குனர் அறிவிப்பு!

சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பிங் பாட் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையம்:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு சர்வதேச நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று பரவி வந்ததால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அனைத்து நாடுகளுக்கும் விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையம் அதிகமான போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.

தற்போது இந்த விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பிங் பாட் என்னும் புதிய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் படுக்கை, ரீடிங் லைட்டுகள், சார்ஜிங் வசதிகள், யூ.எஸ்.பி. சார்ஜர், லக்கேஜ் வைக்கும் இடம், விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. அதாவது பயணிகள் தங்களது இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கும் போது இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த திட்டம் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டில் பயணிகளுக்காக ‘ஸ்லீப்ஸோ’ என்று உருவாக்கியுள்ளனர்.

செப்டம்பரில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது – முக்கிய விவரங்கள் இதோ!

மேலும் அதிநவீன வசதிகளை கொண்ட இந்த ஸ்லீப்பிங் கேப்சுல்கள் உள்நாட்டு முனையத்தின் வருகைப் பிரிவில், பேக்கேஜ் பெல்ட் எண் 1ற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லீப்பிங் பாட் வசதியை மக்கள் ஒரு மணி நேர அடிப்படையில் பெறலாம் அல்லது ஆன்லைன் முன்பதிவு மூலம் பதிவு செய்யலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதியின் மூலம் அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுக்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை விமான நிலைய இயக்குனர் டாக்டர் சரத் குமார், மற்ற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!