இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் – செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு!!
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத பட்சத்தில், அந்த பயன்பாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்ட பிறகு பண பரிவர்த்தனை என்பது எளிதான காரியமாகி விட்டது. தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை கொண்டு பணபரிவர்த்தனை எளிதாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிவர்த்தனை முறை பல கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. இருந்தாலும் டெபிட் கார்டுகளின் ரகசிய எண் இல்லாமல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆட்டோ டெபிட் முறையும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த ஆட்டோ டெபிட் முறையில் பல்வேறு குழப்பங்களும், மோசடிகளும் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ டெபிட் முறையை பயன்படுத்தி பயனாளர்களின் அனுமதி இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது எனவும், அதற்கான புதிய கட்டுப்பாடுகள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 72,330 பேருக்கு கொரோனா – 354 பேர் பலி!!
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும், புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துவது குழப்பத்தை உண்டாக்கும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதால், செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்