ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – இப்படி ஒரு வாய்ப்பா? முழு விவரம் இதோ!
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், இதற்கான சிறப்பு முகாம் ஒன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்:
மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் .. 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி – அமைச்சர் முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
அதன்படி, நவம்பர் மாத இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழுப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் ஏற்பாடு செய்து வரும் நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் வாழ்நாள் சான்றிதழ் குறித்தும், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.