தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் .. 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் அரசு சார்பில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அவர்கள் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழக அரசு படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு என்று அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அரசு வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆதாரை கொண்டு நடக்கும் மோசடிகள் ..பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசு!
Exams Daily Mobile App Download
அப்போது, தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என்றும், மேலும், அணைத்து தொகுக்களிலும் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் எப்போது எங்கு நடத்தப்படுகிறது என்றும், மாணவர்கள் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான தகவல்கள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நவம்பர் 27ம் தேதி நடக்க உள்ள தனியா வேலைவாய்ப்பு முகாமில் 20,000 இளைஞர்கள் கலந்து கொள்ளுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.