தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.21,000/-
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Protection Officer பணிக்கு தகுதியான நபர்கள் நிரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதிவின் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை எளிதாக செய்து கொள்ள அறிவித்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Child Protection Unit (DCPU) |
பணியின் பெயர் | Protection Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
District Child Protection Unit காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Protection Officer பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
DCPU கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொழில் / கல்வி / சமூக நலம் / குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் கட்டாயம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
District Child Protection Unit வயது வரம்பு:
இப்பணிக்கு பொது விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 62 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DCPU ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாத ஊதியமாக ரூ. 21,000/- வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DCPU விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.01.2022 அன்றைய தினத்திற்குள் கீழே கொடுத்துள்ள சேரும்படி அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தர்மபுரி.