குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை – DGHS அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) வெளியிட்டுள்ளது. அதன் படி 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் பரவல் தாக்கமானது வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக கொரோனா பாதிப்பானது தினசரி 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியா, கொரோனா 2 ஆம் அலை தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது என தெரிகிறது.
தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் காலிப்பணியிடங்கள்? போலி விளம்பரங்கள் மீது நடவடிக்கை தேவை!
அதே நேரத்தில் இந்தியாவில், கொரோனா 3 ஆம் அலையின் தாக்கம் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதிலும் 3 ஆம் அலை அதிகபட்சமாக குழந்தைகளை தாக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) வெளியிட்டுள்ளது. அதன் படி 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், டாக்டர்களின் கண்காணிப்பில் முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான கொரோனா சிகிச்சையின் போது ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் அந்த குழந்தைகளுக்கு எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.