தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் காலிப்பணியிடங்கள்? போலி விளம்பரங்கள் மீது நடவடிக்கை தேவை!
தமிழக மின்வாரியத்தின் பெயரில் சிலர் போலி விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருவதை ஒட்டி மின்வாரியம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
மின்வாரியம்:
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கான பணியாளர்கள் மின்வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2020ம் ஆண்டுக்கான மின்வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெறப்பப்பட்டது. அதன்படி, 600 உதவி பொறியாளர், 500 இளநிலை உதவியாளர் கணக்கு, 1,300 கணக்கீட்டாளர் பணியிடங்கள் 2020ம் ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும்.
தமிழகத்தில் ரூ.2000 & 14 மளிகைப் பொருட்கள் டோக்கன்கள் தயார் – நாளை முதல் விநியோகம்!
2021ம் ஆண்டு துவக்கத்தில் கள உதவியாளர் பணிக்கு 2,900 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக இந்த பணிகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழக மின்வாரியத்தில் 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது கேங்மேன் பணிகளுக்கு மின்வாரியம் ஆட்களை தேர்வு செய்வது போல் மின்வாரியத்தின் பெயரில் போலி விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதில் தேர்வு கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. பலரும் அந்த விளம்பரங்களை உண்மை என்று நம்பி, பணம் கொடுத்து ஏமாறும் சூழல் உள்ளது. இதனால் இந்த போலி விளம்பரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மின்வாரியம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கருத்துக்கள் எழுந்துள்ளது.