திருப்பதி செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இம்மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பதி திருவிழாக்கள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் இருக்கும் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவிலில் அங்கபிரதட்சணம், இலவச தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம், கட்டண சேவைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷிடம் கோபியை வீட்டை விட்டு விரட்ட சொல்லும் ராதிகா, அதிர்ச்சியில் கோபி – புதிய திருப்பங்கள்!
இதையடுத்து ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிடுவது வழக்கமாகும். அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விழாக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று ரிஷி பஞ்சமியும், வருகிற 6 மற்றும் 21ம் தேதி அன்று சர்வ ஏகாதசியும், 7ம் தேதி அன்று வாமன ஜெயந்தியும் 9ம் தேதி அன்று அனந்த பத்மநாப விரதமும், 11ம் தேதி மகாளய பக்ஷம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து 13ம் தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் திருவிழாவும் , 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாத இறுதியில் 27ம் தேதி அன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்