தேவர் குருபூஜைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு,குரு பூஜை நடக்கும் அக்டோபர் 28, 29, 30 நாட்களில் தனியார் வாகனங்களில் செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.
தேவர் ஜெயந்தி:
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் முத்துராமலிங்க தேவரின் 59-வது குருபூஜை மற்றும் 114-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. பசும்பொன் தேவரின் குரு பூஜை விழாவிற்காக பல முக்கிய அரசியல் தலைவர்களும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவார்கள். இந்த வருடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகிறார். இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – 3வது நகரத்தில் லாக் டவுன் அமல்!
அதில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை யின்போது பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல், அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாகத் தனியார் வாகனங்களில் பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு, தனியார் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்பத்திலும் சீரியலை விட்டு விலகாத ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ஒரு நெகிழ்ச்சி பதிவு!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேவர் ஜெயந்தி விழாவில் 2017ஆம் ஆண்டு இருந்த சூழல் தற்போது இல்லை. இதனால் தேவர் ஜெயந்தி விழாவை அரசு அமைதியாக நடத்த விரும்புகிறது. 2017ஆம் ஆண்டு பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் பசும்பொன்னுக்குச் செல்வதற்காக மாவட்ட எல்லையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிடப்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் அது நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.